சம்புவராயருக்கு படையல்

சம்புவராயருக்கு படையல்

ஒவ்வொரு ஆண்டும் ஆடிமுழு நிலவு நாளில் படைவீட்டில் அரசமைத்த சம்புவராய மன்னர்களுக்கும் படைவீட்டம்மனுக்கும் விழா எடுத்துவருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சிறப்பான விழா நடைபெறாமல் போனது அனைவரது துரதிர்ஷ்டமே. ஆனால் இந்த 2021-ம் ஆண்டு இந்த விழாவை மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடி முழுநிலவு நாளான ஆடி,7 (23.07.2021) அன்று மாலை சுமார் 4 மணியளவில் படைவீட்டம்மனுக்கு பொங்கல் வைத்தாலும், சம்புவராய மன்னர்களுக்கு படையல் நிகழ்வும் கோயில் மைதானத்தில் நடைபெறும்.

சம்புவராய மன்னருக்கான படையல் நிகழ்ச்சியின் விவரங்கள்

நாள்: 23-7-2021, வெள்ளிக்கிழமை

நிகழ்ச்சி-1
நேரம்: மாலை 4 மணி
இடம்: படைவீடு ரேணுகாம்பாள் கோயில் திடல், படைவீடு
நிகழ்வு: சம்புவராய மன்னர்களுக்கு படையல்

நிகழ்ச்சி-2
நேரம்: மாலை 5 மணி
இடம்: வீரக்கோயில் – வெங்கடேஷ்வரா திருமண மண்டபம்
நிகழ்வு: படைவீடு நாவல் எழுதிய தமிழ்மகன் அவர்களுக்கு வென்று மண்கொண்டான் விருது – 2021 வழங்கும் விழா

 

படைவீடு சம்புவராயர் ஆய்வு மையம் நடத்தும் “வென்று மண்கொண்டான் விருது – 2021” வழங்கும் விழா நிகழ்ச்சி நிரல்

 

CATEGORIES
TAGS
Share This